நேற்று காலை அவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. உறவினர்கள் லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி கொண்டு செல்லும் வழியில் முனியாண்டி பரிதாபமாக இருந்தார். ஒரே பகுதியில் மது குடித்த 2 பேர் அடுத்தடுத்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. இது பற்றி தகவல் அறிந்த லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய் தங்கம் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமாரும் சம்பவ இடத்தில் விசாரித்தார். சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே மது குடித்து இரண்டு பேர் இறந்த சம்பவத்தை கண்டித்து பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் பிரேத பரிசோதனையில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன.
இது தொடர்பாக விசாரணை அதிகாரி அஜய் தங்கம் இன்று கூறும்போது, இறந்த சிவக்குமார் கடந்த 3 தினங்களாக வீட்டில் எதுவும் சாப்பிடாமல் மது போதையில் இருந்து உள்ளார். பிரேதப் பரிசோதனையிலும் ஆல்கஹால் தடயங்கள் அவரது உடலில் நுரையீரல், சிறுநீரகம் பகுதியில் இருந்தன. அளவுக்கு அதிகமான மது அவரது உயிரைப் பறித்திருக்கலாம். மதுவில் சயனைடு, விஷக்கொல்லி மருந்துகள் போன்ற எந்த தடயங்களும் இல்லை. ஆனால் இறந்த முனுசாமியின் உடலில் ஆல்கஹால் அறிகுறி இல்லை. ஆனால் அவரும் டாஸ்மாக் கடையில் மது வாங்கிய சி.சி.டி.வி. பதிவு உள்ளது. முனியாண்டியை பொருத்தமட்டில் மது குடிக்கும் போது காலாவதியான தின்பண்டங்கள் எதையாவது சாப்பிட்டு உடல் உபாதை ஆகி இருக்கலாம். ஆகவே தான் வயிற் றுப்போக்கு ஏற்பட்டு இறந்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.